Posts

வாழ்வியல் பாடம்

Image
  இது அல்லாஹ்வின் மீதான முழுமையான நம்பிக்கை மற்றும் அவனது அருளின் மகத்துவத்தை விளக்குகிறது. இதன் விரிவான விளக்கம் பின்வருமாறு: 1. அல்லாஹ்வே தீங்குகளை நீக்குபவன்**   "அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால், அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை."*   - இங்கு **"தீங்கு"** என்பது நோய், துன்பம், இழப்பு, பிரச்சினைகள் போன்றவற்றைக் குறிக்கும்.   - எந்தத் தீமையும் அல்லாஹ்வின் அனுமதியின்றி நடைபெறாது. அவனே அதை நீக்கும் சக்தி வாய்ந்தவன்.   - இது மனிதர்கள் எல்லா பிரச்சினைகளிலும் **அல்லாஹ்வையே நம்ப வேண்டும்** என்பதைக் காட்டுகிறது.   2. அல்லாஹ்வின் நன்மை எதையும் தடுக்க முடியாது**  "உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால், அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது."*   - **நன்மை** என்பது ஆரோக்கியம், செல்வம், அமைதி, ஞானம் போன்றவை.   - அல்லாஹ் ஒருவருக்கு நன்மை அளிக்க முடிவு செய்தால், அதை யாராலும் தடுக்க முடியாது.   - இது **அல்லாஹ்வின் அதிகாரத்தின் மீது முழு நம்பிக்கை** வைக்கும்படி உணர்த்துகிறது.   3. அவன் தன் அடியார்க...

எண்ணம்போல் வாழ்வு

Image
   "எண்ணம்போல் வாழ்வு" என்பது தமிழரின் பாரம்பரிய அறிவுரையைச் சார்ந்தது. இதன் ஆழமான பொருளை பின்வரும் விளக்கங்களுடன் தெளிவாகப் பார்க்கலாம்: 1. **எண்ணம்போல் வாழ்வு**   இந்தக் கூற்றின் அடிப்படைப் பொருள்: **"ஒருவரின் எண்ணங்களே அவரது வாழ்க்கையின் தரத்தை வடிவமைக்கின்றன"** என்பதாகும்.   - *எடுத்துக்காட்டு*: நீங்கள் நேர்மறையாக சிந்தித்தால், உங்கள் செயல்களும் முடிவுகளும் நல்லதாக அமையும். எதிர்மறை எண்ணங்கள் துன்பத்தை ஈர்க்கும். 2. **நல்ல எண்ணம் கொள்வது**   - **பொருள்**: நன்னம்பிக்கை, நல்லிணக்கம், ஆன்மிக முன்னேற்றம் போன்றவற்றை உள்ளடக்கியது.   - *செயல் முறை*:     - தினமும் காலையில் "இன்று நல்ல நாள்" என்று எண்ணத் தொடங்குங்கள்.     - பிறரைப் பற்றி நல்லெண்ணம் வைத்தால், உறவுகள் மென்மையாகும். 3. **பிறருக்கு நன்மை செய்வது**   - **கார்மா தத்துவம்**: நீங்கள் விதைக்கும் நன்மைகள் உங்களுக்கே மகிழ்ச்சியாகத் திரும்பும்.   - *செயல் முறை*:     - சிறிய உதவிகள் (எ.g., பசித்தவருக்கு உணவு, தெருவில் விழுந்...

மார்க்க கல்வி

Image
  மார்க்க கல்வி (இஸ்லாமிய கல்வி) என்பது முஸ்லிம்களுக்கு அவர்களின் மார்க்க அடிப்படைகள், நம்பிக்கைகள், வழிபாடுகள் மற்றும் நெறிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் அவசியமானது. இது ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கிறது.   மார்க்க கல்வியின் அவசியம்:**   1. **நம்பிக்கை மற்றும் அறிவு வலுப்படுத்துதல்**      - இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் (தவ்ஹீத், நபித்துவம், மறுமை நாள்) பற்றிய தெளிவான அறிவைத் தருகிறது.      - ஐமான் (நம்பிக்கை) மற்றும் தக்குவா (இறைவணக்கம்) வலுப்படுகிறது.   2. **சரியான வழிபாட்டு முறைகளைக் கற்றுத் தருதல்**      - தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை சரியான முறையில் செய்ய உதவுகிறது.      - குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை அறிவு கிடைக்கிறது.   3. **தவறான நம்பிக்கைகள் மற்றும் குழப்பங்களைத் தவிர்த்தல்**      - பிழையான நடைமுறைகள், குழப்பங்கள் மற்றும் வழக்கங்களிலிருந்து பாதுகாக்கிறது. ...

இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை!

Image
  இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை! வேதம் கொடுக்கப்பட்ட முந்தைய  சமுதாயமான பனூ இஸ்ராயீலுக்கு அல்லாஹ் தவ்ராத்தை அளித்து அதை அவர்கள் பற்றிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தூர் மலையை அவர்கள் தலைமேல் தூக்கி வைத்து உறுதிமொழி எடுத்தான். 2:63  وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَؕ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّ اذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏ “நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!’’ என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! (அல்குர்ஆன்:2:63.) இப்படி உறுதிமொழி எடுத்த பின்பும் அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்தனர். அந்த வேதத்தை விட்டு விலகினர். அந்த வேதமும் அவர்களிடமிருந்து விலகிக் கொண்டது. எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த சமுதாயம் வேதத்தின் படி நடப்பதற்கு இதுபோன்று  தூர் மலையெல்லாம் தலைக்கு மேல் தூக்கி வைக்கவில்லை. புனித மிக்க குர்ஆன் இறங்கிய மாதமான ரமளான் மாதத்தில் நோன்பைக் கடமையாக்கி, அந்த ந...

நல்ல நண்பன் – கெட்ட நண்பன்

Image
  நல்ல நண்பன் – கெட்ட நண்பன் ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.  நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கக்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கச்சீலனாக மாறிவிடுகின்றான். ‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்’ என்ற பழமொழியும் இதைத் தான் உணர்த்துகிறது. நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய ஈருலக வாழ்கை சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள். مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَالجَلِيسِ السَّوْءِ، كَمَثَلِ صَاحِبِ المِسْكِ وَكِيرِ الحَدَّادِ، لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ المِسْكِ إِمَّا تَشْتَرِيهِ، أَوْ تَجِدُ رِيحَهُ، وَكِيرُ الحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ، أَوْ ثَوْبَكَ، أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப் பவரும் கொல்லனின் உ...

தவறான புரிதல்கள்

Image
  தவறான புரிதல்கள் தற்போதுள்ள காலச் சூழ்நிலையில் எங்கு நோக்கினும்  சரியான புரிதல் இல்லை (மிஸ் அன்டஸ்டேன்டிங்), ஒத்துழைப்பு இல்லை என்பன போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேள்விப்படுகின்றோம். குறிப்பாகக் கணவன் மனைவி, மாமியார் மருமகள், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, தாய் மகள், சக நண்பர்களுக்கு மத்தியில், சக ஊழியர்களுக்கு மத்தியில், முதலாளி, தொழிலாளி போன்ற எல்லா உறவுகளுக்கு மத்தியிலும் பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருப்பது மேலே நாம் குறிப்பிட்ட தவறான புரிதல் தான். எதையுமே நேரான சரியான பார்வையில் பார்க்காமல் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது சமூகத்திற்கோ பாதகமாகவே உற்று நோக்குவதின் விளைவு தான் தவறான புரிதல். அதாவது பிறரைத் தவறாக எடை போடுவது. இவ்வாறு எந்தப் பிரச்சனையையுமே தவறாக உற்று நோக்குபவர்களிடத்தில் நாம் எவ்வளவு தான் பக்குவமாக எதார்த்தமாக பேசினாலும் அதற்கான காரண காரியத்தை அவர்கள் தேடுவார்கள். இது போன்ற நபர்களிடத்தில் நாம் பேசுவதை விட பேச்சைக் குறைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்று கூறுவார்கள். அதுபோல நம்மைப் பற்றி அவர்கள் தவறாகப...

வீணானதை விட்டும் விலகுவோம்

Image
  வீணானதை விட்டும் விலகுவோம் பொதுவாக முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் வீணான, தேவையற்ற காரியங்களை விட்டும் விலகி இருப்பார்கள். அவர்களின் பேச்சிலும், நடத்தையிலும் பெரிய மாற்றம் தென்படும். சின்னத்திரை, சினிமா படங்கள் மற்றும் பாடல்களின் ஓசைகள் ஒடுங்கியும் அதிர்வுகள் அடங்கியும் வீடுகள் அமைதியாய் இருக்கும். தொழுவது, குர்ஆன் படிப்பது, திக்ரு செய்வது போன்ற இபாதத்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இப்படி ஒரு மாதம் மட்டுமல்ல! மற்ற நாட்களிலும் முஃமின்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பொய்யான நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து பண்பட்டவர்களாக வாழ்வது அவசியம். ஏனெனில், ஒழுக்க நெறியோடு இருப்பது நம்பிக்கையாளர்களிடம் எப்போதும் இருக்க வேண்டிய பண்பாக ஏக இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான். وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார். அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். (அல்குர்ஆன்:  25:72 ) பொதுவாக, நல்லவைகளைக் காட்...