Posts

இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை!

Image
  இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை! வேதம் கொடுக்கப்பட்ட முந்தைய  சமுதாயமான பனூ இஸ்ராயீலுக்கு அல்லாஹ் தவ்ராத்தை அளித்து அதை அவர்கள் பற்றிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தூர் மலையை அவர்கள் தலைமேல் தூக்கி வைத்து உறுதிமொழி எடுத்தான். 2:63  وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَؕ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّ اذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏ “நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!’’ என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! (அல்குர்ஆன்:2:63.) இப்படி உறுதிமொழி எடுத்த பின்பும் அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்தனர். அந்த வேதத்தை விட்டு விலகினர். அந்த வேதமும் அவர்களிடமிருந்து விலகிக் கொண்டது. எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த சமுதாயம் வேதத்தின் படி நடப்பதற்கு இதுபோன்று  தூர் மலையெல்லாம் தலைக்கு மேல் தூக்கி வைக்கவில்லை. புனித மிக்க குர்ஆன் இறங்கிய மாதமான ரமளான் மாதத்தில் நோன்பைக் கடமையாக்கி, அந்த ந...

நல்ல நண்பன் – கெட்ட நண்பன்

Image
  நல்ல நண்பன் – கெட்ட நண்பன் ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.  நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கக்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கச்சீலனாக மாறிவிடுகின்றான். ‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்’ என்ற பழமொழியும் இதைத் தான் உணர்த்துகிறது. நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய ஈருலக வாழ்கை சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள். مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَالجَلِيسِ السَّوْءِ، كَمَثَلِ صَاحِبِ المِسْكِ وَكِيرِ الحَدَّادِ، لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ المِسْكِ إِمَّا تَشْتَرِيهِ، أَوْ تَجِدُ رِيحَهُ، وَكِيرُ الحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ، أَوْ ثَوْبَكَ، أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப் பவரும் கொல்லனின் உ...

தவறான புரிதல்கள்

Image
  தவறான புரிதல்கள் தற்போதுள்ள காலச் சூழ்நிலையில் எங்கு நோக்கினும்  சரியான புரிதல் இல்லை (மிஸ் அன்டஸ்டேன்டிங்), ஒத்துழைப்பு இல்லை என்பன போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேள்விப்படுகின்றோம். குறிப்பாகக் கணவன் மனைவி, மாமியார் மருமகள், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, தாய் மகள், சக நண்பர்களுக்கு மத்தியில், சக ஊழியர்களுக்கு மத்தியில், முதலாளி, தொழிலாளி போன்ற எல்லா உறவுகளுக்கு மத்தியிலும் பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருப்பது மேலே நாம் குறிப்பிட்ட தவறான புரிதல் தான். எதையுமே நேரான சரியான பார்வையில் பார்க்காமல் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது சமூகத்திற்கோ பாதகமாகவே உற்று நோக்குவதின் விளைவு தான் தவறான புரிதல். அதாவது பிறரைத் தவறாக எடை போடுவது. இவ்வாறு எந்தப் பிரச்சனையையுமே தவறாக உற்று நோக்குபவர்களிடத்தில் நாம் எவ்வளவு தான் பக்குவமாக எதார்த்தமாக பேசினாலும் அதற்கான காரண காரியத்தை அவர்கள் தேடுவார்கள். இது போன்ற நபர்களிடத்தில் நாம் பேசுவதை விட பேச்சைக் குறைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்று கூறுவார்கள். அதுபோல நம்மைப் பற்றி அவர்கள் தவறாகப...

வீணானதை விட்டும் விலகுவோம்

Image
  வீணானதை விட்டும் விலகுவோம் பொதுவாக முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் வீணான, தேவையற்ற காரியங்களை விட்டும் விலகி இருப்பார்கள். அவர்களின் பேச்சிலும், நடத்தையிலும் பெரிய மாற்றம் தென்படும். சின்னத்திரை, சினிமா படங்கள் மற்றும் பாடல்களின் ஓசைகள் ஒடுங்கியும் அதிர்வுகள் அடங்கியும் வீடுகள் அமைதியாய் இருக்கும். தொழுவது, குர்ஆன் படிப்பது, திக்ரு செய்வது போன்ற இபாதத்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இப்படி ஒரு மாதம் மட்டுமல்ல! மற்ற நாட்களிலும் முஃமின்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பொய்யான நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து பண்பட்டவர்களாக வாழ்வது அவசியம். ஏனெனில், ஒழுக்க நெறியோடு இருப்பது நம்பிக்கையாளர்களிடம் எப்போதும் இருக்க வேண்டிய பண்பாக ஏக இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான். وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார். அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். (அல்குர்ஆன்:  25:72 ) பொதுவாக, நல்லவைகளைக் காட்...

பயனுள்ள கல்வியை வேண்டுவோம்

Image
  பயனுள்ள கல்வியை வேண்டுவோம் மனிதன் இணைந்திருக்கக் கூடிய குடும்பம், வணிகம், அரசியல் என எந்த ஒரு துறையையும் விட்டு வைக்காமல் நமது மார்க்கம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வகையில் மனித வாழ்வில் இன்றியமையாததாய் இருக்கக் கூடிய கல்வித் துறை குறித்தும் அதிகம் போதிக்கின்றது. இஸ்லாம் அல்லாத இன்னபிற மதங்களில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்துவது மட்டுமல்லாமல், தாழ்ந்த சாதியினர் கல்வி கற்கக் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது அருள்மறையோ உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி என்ற சித்தாந்தத்தை அதிகமதிகம் வலியுறுத்தி அறிவுக் கண்ணைத் திறந்து விடுகின்றது.  கல்விக்காகப் பயணம் மேற்கொள்ளுதல் அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். (அல்குர்ஆன்:22:46) அறிவாளிகள் தான் அருள் மறையை அறியமுடியும் இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. (அல்குர்ஆன்:29:49) கல்வியாளர்களின் சிறப்பு உங்களில் நம...

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

Image
  அல்லாஹ்வின் தூதரே  அழகிய முன்மாதிரி “எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையைப் பார்த்து விட்டு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை எவரும் கூறவே முடியாது. இப்போது நான் சொல்வதை மட்டும் பாருங்கள்! கடந்த காலத்தைப் பார்க்காதீர்கள் என்று தான் எந்தத் தலைவரும் சொல்வார்கள்.  இவர் நிச்சயம் பொய் சொல்ல மாட்டார் என்றும், இவருக்கு இதைச் சொல்வதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க முடியாது என்றும் நம்பியதால் தான் அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பின்பற்றும் மக்களாக ஆனார்கள். இறைத்தூதர் என்று ஒருவர் வாதிட்டால் அவர் கொண்டு வந்த செய்தி இறைவன் கூறுவது போல் அமைந்திருக்க வேண்டும். அப்படித் தான் அவர்கள் கொண்டு வந்த செய்திகள் அமைந்து உள்ளன. அவர்களுக்கு எந்த ஆதாயத்தையும் பெற்றுக் கொள்ள முடியாத வகையிலும் இறைவனை மட்டும் பெருமைப்படுத்தும் வகையிலும் தான் அந்தச் செய்திகள் அமைந்துள்ளன. எந்தக் கொள்கையைச் சொன்னால் இவ்வுலகில் பதவியையும், பெருமையையும் பெறமுடியாதோ அந்தக் கொள்கையைத் தான் அவர்கள் சொன்னார்கள். படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான். உலகத்தை அழித்த பின்னர் மீண்டும் உயிர் கொடுத்...